‘சிஐடி பொலிஸ்’ ‘‘CID POLICE‘‘ என எழுதப்பட்ட புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டையை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலாங்கொடை, பின்னவலை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றங்களைச் செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
