பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினரான **‘கஞ்சிபானி இம்ரானின்’ நெருங்கிய உறவினர் எனக் கூறப்படும் 54 வயதுடைய மொஹமட் அஸ்மின் மொய்தீன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த ஓகஸ்ட் 10ஆம் திகதி பிற்பகல் 1.20 மணியளவில், கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாவத்தை, ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.பிரான்ஸில் வசித்து வருவதாக நம்பப்படும் மற்றொரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் குழு உறுப்பினரான **‘குடு அஞ்சு’ என்பவரால் இந்த கொலை திட்டமிடப்பட்டிருக்கலாம்** என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பெண் உட்பட இருவரிடம் ‘ஐஸ்’ போதைப்பொருள்
கொலை தொடர்பான விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கொழும்பு வடக்கு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (17) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த **21 வயதுடைய ஆண் ஒருவரும் 23 வயதுடைய பெண் ஒருவரும்**, 25 கிராம் 840 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்கள் கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மீட்பு மேலும், 19, 25 மற்றும் 28 வயதுடைய மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 12 கிராம் 380 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் மற்றும் கொலைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.குறித்த சந்தேகநபர்கள் மட்டக்குளி, தொம்பே மற்றும் முல்லேரியா பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்சூடு
உயிரிழந்த மொஹமட் அஸ்மின் மொய்தீன், ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் வன்பொருள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழிவாங்கும் கொலையா?
இரத்மலானை பகுதியில் அண்மையில் ‘குடு அஞ்சுவின்’ நெருங்கிய கூட்டாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குப் பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம்** என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
