திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.திருகோணமலையிலிருந்து புல்மொட்டை நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில், வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் இருக்கைகள் ஏதுமின்றி, பேருந்தின் தரையிலேயே அமர்ந்து சாதாரணமாக தனது கைபேசியை பார்த்தபடி பயணித்துள்ளார்.அதே பேருந்தின் இருக்கைகளில் உள்நாட்டு பயணிகள் (குறிப்பாக ஆண்கள்) பலர் அமர்ந்தபோதும் அந்த பெண்ணுக்கு இருக்கையை வழங்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.இந் நிலையில் பெண் தரையில் அமர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வரும் நிலையில் நம் நாட்டுக்கு வந்த விருந்தாளி தரையில் அமர்ந்திருந்தும் பேருந்தில் பயணித்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.அதோடு நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான, கௌரவமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நம் அனைவரினதும் கடமை என சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
