டெல்லி மாள்வியா நகரில் உள்ள ஓர் உணவகத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது,இன்று காலை 9 மணியளவில் தெற்கு டெல்லி தீயணைப்புத் துறைக்கு, மாள்வியா நகரில் உள்ள பிரபலமான ‘லெமன் க்ரீன்’ என்ற உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.இதனையடுத்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. நிலைமையின் தீவிரத்தை அறிந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் அங்கு வரவழைக்கப்பட்டன.
