மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் நாட்டுக்கு வந்தடைந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.30,000 மெட்ரிக் டன் பர்னஸ் எண்ணெய் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.இந்த எரிபொருள் கையிருப்பு போதியளவு கிடைத்துள்ள நிலையில் நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
