By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீன பெண் கைது

news team
Last updated: May 15, 2026 10:46 am
By news team
Share
1 Min Read
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீன பெண் கைது
SHARE

சுமார் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் 26 வயதுடைய சீன நாட்டுப் பெண் வர்த்தகர் என தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண் சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்துள்ளார்.அவர் சீனாவிலிருந்து தாய்லாந்தின் பெங்கொக் நகருக்குச் சென்று, அங்கிருந்து தாய் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான TG-307 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.அவர் தனது பயணப் பொதிகளுடன், விமான நிலைய வருகை முனையத்தில் உள்ள Green Channel ஊடாக வெளியேற முயன்றபோதே அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.இதன்போது, அவரது இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 33,600 சீன தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 168 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் குறித்த பெண்ணைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இன்று முதல் புதிய பேருந்து கட்டணம் அமல்: குறைந்தபட்ச கட்டணம் ரூ.34 – 12% முதல் 20% வரை உயர்வு
உள்நாடு

இன்று முதல் புதிய பேருந்து கட்டணம் அமல்: குறைந்தபட்ச கட்டணம் ரூ.34 – 12% முதல் 20% வரை உயர்வு

By news team
இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம்: நோயாளர்கள் 78,125 ஆக உயர்வு
உள்நாடு

இலங்கையில் டெங்கு பாதிப்பு தீவிரம்: நோயாளர்கள் 78,125 ஆக உயர்வு

By news team
டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்
உள்நாடு

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் யுவதியின் சடலம் மீது மூவர் பாலியல் துஷ்பிரயோகம்

By news team
கிளிநொச்சியில் மனைவி விவாகரத்து கோரியதால் கோபம் கொண்டு கணவன் தென்னை மரங்கள் வெட்டி சேதம்
உள்நாடு

கிளிநொச்சியில் மனைவி விவாகரத்து கோரியதால் கோபம் கொண்டு கணவன் தென்னை மரங்கள் வெட்டி சேதம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?