By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

எப்பாவலை பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – 5 மாணவர்கள் காயம், மாணவர் கைது

news team
Last updated: May 13, 2026 12:21 pm
By news team
Share
1 Min Read
எப்பாவலை பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – 5 மாணவர்கள் காயம், மாணவர் கைது
SHARE

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் தொழில்நுட்பப் பிரிவில் உயர்தரம் பயிலும் மாணவர்கள் எனத் தெரியவந்துள்ளது.தாக்குதலை நடத்தியவரும் அதே பாடசாலையில் 12-ஆம் தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் பயிலும் ஒரு மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர், தாக்குதலை நடத்திய மாணவருக்கும் காயமடைந்த மாணவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அதற்குப் பழிவாங்கும் நோக்கில் இன்று (13) காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஒரு மாணவர் மீது தாக்குதல் நடத்தியபோது, அதனைத் தடுக்கச் சென்ற மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாடசாலைக்குள் கூர்மையான ஆயுதத்தை எடுத்து வந்து சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய மாணவரை, தாக்குதலுக்குப் பயன்படுத்திய ஆயுதத்துடன் எப்பாவலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.காயமடைந்த மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் தொடர்பாக எப்பாவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து தடையை நீக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்
உலகம்

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்து தடையை நீக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

By news team
யாழ்ப்பாணத்தில் பணிப்பெண் நகை திருட்டில் கைது – 14 பவுண் நகைகள் மீட்பு
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் பணிப்பெண் நகை திருட்டில் கைது – 14 பவுண் நகைகள் மீட்பு

By news team
பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி
உள்நாடு

பண்டாரவளையில் தனியார் பேருந்தில் இளைஞனுடன் பிடிபட்ட மாணவி

By news team
290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்
இந்தியா

290 வகை உணவுகளைச் சமைத்து மருமகனை பிரமிக்க வைத்த மாமியார்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?