உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமண ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலித்ததால் 140 கோழிகள் ஒரே இரவில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்தியாவில் திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் இசைக் கச்சேரி மற்றும் டிஜே உள்ளிட்டவை நடைபெறுவது வழக்கம். இதனால், நிகழ்வுகளில் பொதுமக்கள் உற்சாகத்துடன் காணப்படுவர்.உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த திருமண விழாவின் போது 140 கோழிகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் ஏப்ரல் 25ஆம் தேதி இரவு அந்த ஊரை சேர்ந்த பப்பன் விஷ்வகர்மா என்வரின் மக்களுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக இரவு மணமக்களை அழைத்துக்கொண்டு ஊர்வலமாக மேளம் தாளங்கள் முழங்க பிரம்மாண்டமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது இந்த ஊர்வலம் குத்வார் பகுதியிலுள்ள ராம் பத்ரா பூர்வா என்ற இடத்திலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல இசை மற்றும் DJ அமைப்புடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், அதிக ஒலியில் பாடல்கள் ஒலித்ததாக கூறப்படுகிறது.அந்த கிராமத்திற்கு அருகில் “சாபிர் அலி கோழிப் பண்ணை” என்ற பெயரில் சாபிர் அலி என்ற நபர் கோழி பண்ணனையை நடத்தி வந்துள்ளார். இதில் ஆயிரத்திற்கு அதிகமான கோழிகள் வளர்க்கப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் திருமண ஊர்வலத்தின் போது அதிக சத்தத்தில் DJ இசை ஒலித்ததால், அருகிலுள்ள ஒரு கோழிப் பண்ணையில் இருந்த சுமார் 140 கோழிகள் உயிரிழந்ததாக சாபிர் அலி புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
