By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் – புதைக்கப்பட்ட சடலத்தின் தலை துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்

news team
Last updated: April 4, 2026 1:15 pm
By news team
Share
1 Min Read
வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் – புதைக்கப்பட்ட சடலத்தின் தலை துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்
SHARE

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த சடலம் ஒன்றின் தலை மர்ம நபர்களால் துண்டிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர், மூன்று மாதங்களுக்கு முன்னர் அகால மரணமடைந்திருந்தார்.அவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் கருப்பணிச்சான் குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த சடலம் புதைக்கப்பட்ட இடத்தை யாரோ மர்ம நபர்கள் மீண்டும் தோண்டி, அதிலிருந்த தலையை மட்டும் அகற்றிச் சென்றுள்ளதாக உயிரிழந்தவரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளனர். அதே மயானத்தில் அண்மையில் இடம்பெற்ற வேறொருவரின் இறுதிச் சடங்கின் போது, அப்பகுதியில் இருந்து வீசிய துர்நாற்றம் காரணமாகவே இவ்விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.துர்நாற்றம் வீசிய இடத்தை பொதுமக்கள் சென்று பார்வையிட்ட போதே, சடலம் தோண்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் குறித்து வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:crimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்
உள்நாடு

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்

By news team
பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு
உள்நாடு

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு

By news team
டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் சிறை – அமெரிக்க நீதிமன்றம்
உலகம்

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் சிறை – அமெரிக்க நீதிமன்றம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?