By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்

news team
Last updated: March 18, 2026 7:25 am
By news team
Share
1 Min Read
சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்
SHARE

சுகாதாரத்துறையை அத்தியாவசிய சேவையாகக் கருதுவதானால், அதனை வழங்கும் ஊழியர்களுக்கும் முறையான சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர், சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.இதன்படி புதன்கிழமை போன்ற பொது விடுமுறை நாட்களில் சுகாதார ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படும் போது, அவர்களுக்குரிய விடுமுறை கொடுப்பனவு முறையாக வழங்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.மேலும் ஏனைய தனியார் வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கப்படும் அதே அளவிலான எரிபொருள் ஒதுக்கீட்டை சுகாதார ஊழியர்களுக்கும் வழங்குவது முறையற்றது.தடையில்லா சேவையை உறுதிப்படுத்த சுகாதாரத் துறைக்கு என பிரத்தியேக எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன் ஏனைய துறைகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு, சுகாதாரத் துறையினரை மட்டும் வழமை போல் பணியாற்றுமாறு கோருவது முரணானது.மேலும் நோயாளர்களுக்கு விடுமுறை நாட்களில் சிகிச்சை தேவைப்படாது என அதிகாரிகள் கருதுகிறார்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தநிலையில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு மற்றும் உரிய அதிகாரிகளின் தலையீட்டுடன் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதியான நடைமுறை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.கூடுதல் பலன்கள் இன்றி ஊழியர்களை விடுமுறை நாட்களில் பணியாற்ற வைத்தால், அதன் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு
உள்நாடு

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பிடம் உள்ள தனியார் காணிகள் விடுவிப்பு – அரசின் புதிய அறிவிப்பு

By news team
கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை
உள்நாடு

கல்முனையில் இறைச்சிக்காக நாய்கள் கொலை – பொலிஸார் விசாரணை

By news team
ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்
தொழில்நுட்பம்

ஐபோன் பயனர்களுக்கு அப்பிள் அவசர எச்சரிக்கை: உடனடி மென்பொருள் புதுப்பிப்பு அவசியம்

By news team
கடனை திருப்பிச் செலுத்தாததால் கடத்தி நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த கும்பல் கைது
உள்நாடு

கடனை திருப்பிச் செலுத்தாததால் கடத்தி நாய் கூண்டில் அடைத்து சித்திரவதை செய்த கும்பல் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?