By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

களுத்துறையில் நள்ளிரவு திருட்டு: சிசிடிவி ஆதாரத்தில் 3 சிறுமிகள் கைது

news team
Last updated: February 26, 2026 1:49 pm
By news team
Share
1 Min Read
களுத்துறையில் நள்ளிரவு திருட்டு: சிசிடிவி ஆதாரத்தில் 3 சிறுமிகள் கைது
SHARE

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்றும் சொக்லேட்களைத் திருடிய மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 40,000 ரூபாவாகும் என களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களைப் பரிசோதித்த பின்னர் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர்.அதனைத் தொடர்ந்து சிறுவர் இல்லத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபி, சொக்லேட், லொலிபொப், சூயிங்கம் மற்றும் பெப்பர்மிண்ட் தொகையொன்றை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சிறுமிகள் சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடி, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.பின்னர் சிற்றுண்டிச்சாலையின் முன் கண்ணாடியைப் பொல்லால் அடித்து உடைத்து, திருடிய பொருட்களைப் பொலித்தீன் பைகளில் போட்டுக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று மறைத்து வைத்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்

TAGGED:arrestmuthalvantamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கந்தளாயில் கால்வாயில் மூழ்கி 16 வயது மாணவன் உயிரிழப்பு

கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராதுவெலிய பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் நீரில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி
உள்நாடு

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி

By news team
நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு
உள்நாடு

நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு

By news team
கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது
உள்நாடு

கொழும்பில் பகுதியில் இளைஞனை தூக்கி தரையில் வீசிய ஆசிரியர் கைது

By news team
மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு
உள்நாடு

மு.க. ஸ்டாலின் 89,000 இலங்கையர்களுக்கு குடியுரிமை கோரிக்கை – நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?