வடக்குக்கான ரயில் சேவை திங்களன்று மீள ஆரம்பம்

7 months ago

வடக்கு புகையிரத மார்க்கத்தில் நாளைமறுதினம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 21) முதல் மீண்டும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, யாழ்.தேவி ரயிலை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.