வடக்கு புகையிரத மார்க்கத்தில் நாளைமறுதினம் திங்கட்கிழமை (ஒக்டோபர் 21) முதல் மீண்டும் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, யாழ்.தேவி ரயிலை அன்றைய தினம் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.