சுயேட்சைக்குழுவின் தந்திரோபாயம் தொடர்பில் வெளிவரும் தகவல்- மக்களை ஏமாற்ற பெரும் திட்டம்
யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் மருத்துவர் தலைமையிலான சுயேட்சைக்குழு ஒன்று புலம்பெயர் தமிழரின் பணத்துடன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு தமிழரின் வாக்குகளை கவர திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகிறது.
அண்மைய நாள்களில் அந்த குழுவின் தலைமை வேட்பாளருக்கு எதிராக குரல்கள் எழும்புவதாக ஓர் விண்பத்தை காண்பித்தும் மருத்துவரின் காருக்கு கல்லெறி தாக்குதல் நடத்தி அதனை பிரபலப்படுத்துவதும் இனி வரும் நாள்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில் மன்னார் நீதிமன்ற வழக்கில் சாதாரணமாக முன்னிலையாக வேண்டிய மருத்துவர், அவரது ரெண்டை அதிகரிப்பதற்காக முன்னிலையாகாமல் பிடியாணை உத்தரவை பெற்று ஊடகங்களில் செய்தி வர வைத்தார்.
எனினும் அந்த வழக்கில் விளக்கமறியல் கிடைக்காததால் தனக்கு எதிராக மாற்று கட்சிகள் கிளர்ந்துள்ளன என காண்பித்து வாக்குகளை பெற திட்டமிட்டுள்ளார் என அவர் சார்ந்து இயங்கும் தரப்பினர் தெரிவித்தனர்.
வரும் நாள்களில் அவரது கார் மீது தாக்குதல் போன்ற பல நடவடிக்கைகளை செய்ய பெருமளவு பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.