யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரின் உத்தியோகபூர்வ பதவிநிலை பெயர்பலகை கொண்ட வாகனம் விபத்துக்குள்ளாகியது.
வாகனம் விபத்துக்குள்ளான போது, யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளரோ அவரது சாரதியோ பயணிக்கவில்லை என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
வாகனத்தை செலுத்தியவர் மதுபோதையிலிருந்தார் என்று பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
வாகனம் வேகக்கட்டுப்பாட்டையிழந்து வீதியின் மறுபுறத்திலிருந்த மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியது. விபத்தின் போது வீட்டின் முன்பாக நிறுத்திவைத்திருந்த மோட்டார் சைக்கிள் சேதத்துக்குள்ளாகியது.
மாவட்ட செயலாளரின் மகன், தந்தையின் வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும் அவரது நண்பர் படுகாயமடைந்த்தாகவும் சம்பவ இடத்தில் தெரிவிக்கப்பட்டது.
விபத்தையடுத்து அங்கு விரைந்த மாவட்ட செயலாளர் மகனை அழைத்துச் செல்ல முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.