யாழ்.மாவட்ட செயலாளரின் தொலைபேசி அழைப்பு - நீதிமன்றின் கட்டளையை எதிர்கொள்வோம் என முதல்வன் பதிலளிப்பு


இன்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் வாகனம் விபத்துக்குள்ளானது தொடர்பில் முதல்வனின் வெயியாகிய செய்தி தொடர்பில் மாவட்டச் செயலாளரே தொலைபேசி ஊடாக இணக்கப்பாட்டுக்கு கோரியிருந்தார்.
நீதிமன்றம் சரியான முடிவுக்கு வரும் வரை முதல்வன் தனது ஒத்துழைப்பை வழங்குவான் என்று பதிலளித்து அவருக்கான அழைப்பை முதல்வன் துண்டித்தான்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் என்ற போர்வையில் மோசடியான அரச துறைக்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் சொர்ணலிங்கம் வருணன் என்பவரே முதல்வனின் அலைபேசி இலக்கத்தை வழங்கினார் என்பது அறியக்கிடைத்தது.
"கொழும்பில் இருந்தும் உங்களோடு கதைக்கும் அதிகாரம் உள்ளது. விபத்தினால் ஒரு குடும்பம் சோகத்தில் இருக்கும் போது இப்படியா செய்தி போடுவது" என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் கூறினார்.
"நீதிமன்றுக்கு இந்த வழக்கு செல்லுமானால் உரிய சிசிரிவி ஆதாரங்கள் உள்ளிட்ட சாட்சிகள் ஊடாக நீதிமன்றம் ஒரு தீர்மானத்துக்கு வரட்டும், அதனை நாம் சரியாக எதிர்கொள்வோம்" என முதல்வன் தனது அழைப்பை துண்டித்தான்.
இந்த விபத்தில் தொடர்பில் பல்வேறு சாட்சியங்கள் உண்டும். விபத்துக்கு முன் இந்த மது விருந்தை நடத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் தொடர்பிலும் முதல்வன் வெளிப்படுத்த தயங்கமாட்டான்.