உயர் நீதிமன்றுக்கு நான்கு நீதியரசர்கள் நியமனம்

4 months ago


நான்கு புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இன்று(12) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ஆர்.எம்.எஸ். ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பி.அபேகோன் மற்றும் எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் புதிய உயர. நீதிமன்ற நீதியரசர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை, அரசியலமைப்புச் சபை உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்த மறுத்துவிட்டது. அவர் பதவி நீக்கத்தைத் தவிர்க்க பதவி விலகத் திட்டமிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.