வாகன இறக்குமதிக்கான புதிய வரி விதிப்பால் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிக்கும்
வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்குப் பொருந்தும் இறக்குமதி வரி சதவீதங்களை அரசு அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பின் மூலம் அறிவித்துள்ளது.
அதன்படி, வாகனங்களுக்கு 200 சதவீதம் முதல் 300 சதவீதம் வரையிலான இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட அரசிதழில், சில வகை வாகனங்கள் அவற்றின் இயந்திர சிலிண்டர் திறன் மற்றும் கிலோவாட்களில் அளவிடப்படும் மோட்டார் சக்தியின் அடிப்படையில் வரி விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வரிகள் காரணமாக வாகன விலைகள் சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெறுமதிசேர் வரி (வட்) உட்பட பிற வரிகளும் பயன்படுத்தப்பட்டால், இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே கூறினார்.

















