சர்வதேச சட்டங்களுக்கு அமைய, ஹோர்முஸ் நீரிணை வழியாக பொதுமக்களின் சிவில் கப்பல்கள் எவ்வித தடையுமின்றி பயணிப்பதற்கு அனுமதிக்கப்படும் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படை தெரிவித்துள்ளது.உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட்டு ஈரான் இராணுவம் இதனை குறிப்பிட்டுள்ளது.ஹோர்முஸ் நீரிணையானது சிவில் கப்பல்களின் பாதுகாப்பான மற்றும் தீங்கு விளைவிக்காத போக்குவரத்துக்கு எப்போதும் திறந்தே இருக்கும்.எவ்வாறாயினும், போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி இந்த நீரிணையை நெருங்கும் வெளிநாட்டு இராணுவக் கப்பல்கள் விதிமீறலில் ஈடுபடுவதாகவே கருதப்படும்.அவ்வாறு அத்துமீறி நுழையும் இராணுவக் கப்பல்கள் மீது மிகக் கடுமையான இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்த நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், அதேவேளை சர்வதேச கப்பல் போக்குவரத்து குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையிலும் ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
