By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஹட்டனில் அதிநவீன சஃபாரி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்

news team
Last updated: April 6, 2026 2:36 pm
By news team
Share
1 Min Read
ஹட்டனில் அதிநவீன சஃபாரி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்
SHARE

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) சஃபாரி பேருந்து இன்று(06.04.2026) முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இரத்தமலானை பணிமனையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டிருந்த இந்த பழைய பேருந்து, ஹட்டன் பணிமனைக்கு கொண்டு வரப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளுடனும் 42 இருக்கைகளுடன் ரூ. 4 மில்லியன் செலவில் புதுப்பித்து வடிவமைக்கப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் மேல் கூரையுடன் மற்றும் வறண்ட காலத்தில் கூரையின்றி இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சஃபாரி பேருந்தில் ஒலி அமைப்பு, கவர்ச்சிகரமான மின்விளக்குகள் மற்றும் பல நவீன டிஜிட்டல் துணைக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும், இந்த SLTB சஃபாரி பேருந்தை நுவரெலியா மாவட்டத்திற்குள் அல்லது வெளியே எந்தப் பயணத்திற்கும் SLTB கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம் என ஹட்டன் பணிமனை மேலாளர் திரு. பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.இந்தப் பேருந்திற்குத் தனி ஓட்டுநர் மற்றும் நடத்துநர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலாத் தலங்களைப் பார்வையிடும் ஹட்டன் தொடருந்து நிலையத்திலிருந்து நல்லத்தண்ணி வரை நடைபெறும் 2026 – 2027 ஆம் ஆண்டு ஸ்ரீபாத மலை யாத்திரைக்கான சேவையிலும் இந்தப் பேருந்தை இணைக்க பணிமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.சஃபாரி பேருந்து திறப்பு விழாவில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் பிரதீப் வீரசேகர, நுவரெலியா மாவட்ட SLTB பிரதம மேலாளர் ஆர்.எம்.ஆர்.ஜே.பி. தசநாயக்க மற்றும் ஹட்டன் SLTB பணிமனையின் பல ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட மாணவியை விரட்டிப் பிடித்து மீட்ட தந்தை
உள்நாடு

முச்சக்கரவண்டியில் கடத்தப்பட்ட மாணவியை விரட்டிப் பிடித்து மீட்ட தந்தை

By news team
அர்ச்சுனாவுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது – எம்.பி. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி
உள்நாடு

அர்ச்சுனாவுக்கு கேள்வி கேட்க உரிமை உள்ளது – எம்.பி. ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி

By news team
யாழ் போதனா மருத்துவமனை கண் சிகிச்சைக்காக தென் இலங்கையிலிருந்து நோயாளர்கள் வருகை – கூடுதல் வசதிகள் கோரிக்கை
உள்நாடு

யாழ் போதனா மருத்துவமனை கண் சிகிச்சைக்காக தென் இலங்கையிலிருந்து நோயாளர்கள் வருகை – கூடுதல் வசதிகள் கோரிக்கை

By news team
சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்
உள்நாடு

சுகாதார ஊழியர்களுக்கு விடுமுறை கொடுப்பனவு மற்றும் தனி எரிபொருள் ஒதுக்கீடு அவசியம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?