By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

news team
Last updated: February 10, 2026 10:36 pm
By news team
Share
1 Min Read
அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
SHARE

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகப் போக்குவரத்து நெரிசல் மிக்க வீதியொன்றில் அவசரமாகத் தரையிறங்கியது.இந்தச் சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்ததுடன், பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஜோர்ஜியா மாகாணத்தின் கெய்ன்ஸ்வில் (Gainesville) பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.சிறிய ரக விமானம் ஒன்றின் எஞ்சினில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதனைத் திட்டமிட்டபடி விமான நிலையத்தில் தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து, விமானி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்து, அருகிலிருந்த போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான வீதியொன்றில் அவசரமாகத் தரையிறக்கியுள்ளார்.வீதியில் தரையிறங்கிய போது, கட்டுப்பாட்டை இழந்த விமானம் அங்கிருந்த பல வாகனங்கள் மீது மோதியது.இதில் வாகனங்களில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகத் தரையிறங்கிய இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்த காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TAGGED:americamuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் கைது – படகும் பறிமுதல்

By news team
யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் 4 கிலோ கஞ்சாவுடன் நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது

By news team
IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு
உள்நாடு

IDH மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மரணம் – தரமற்ற மருந்துகளே காரணம் என கணவர் குற்றச்சாட்டு

By news team
முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்
உள்நாடு

முல்லைத்தீவு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி – 28 முதல் நெல் கொள்வனவு ஆரம்பம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?