உலகின் முதல் நாடாக பசுபிக் பெருங்கடலில் உள்ள கிரிட்டிமாட்டி தீவில் புத்தாண்டு மலர்ந்துள்ளது.இலங்கை நேரப்படி சரியாக, இன்று (31) பிற்பகல் 3.30 மணியளவில் கிரிட்டிமாட்டியில் புத்தாண்டு பிறந்துள்ளது.இன்னும் சில மணி நேரங்களில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளில் புத்தாண்டு பிறக்கும்.அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா, வடகொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு புத்தாண்டு மலரவுள்ளது.
