By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

இயேசு பிறந்த பெத்லகேமில் இரண்டு வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் நத்தார் உற்சாகம்

news team
Last updated: December 25, 2025 10:27 am
By news team
Share
2 Min Read
இரண்டு வருடங்கள் கழித்து நத்தார் பண்டிகையை கொண்டாடும் பெத்லகேம்
SHARE

காஸா பகுதியில் நிலவும் போர்நிறுத்தச் சூழலுக்கு மத்தியில், இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் இரண்டு வருடகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நத்தார் கொண்டாட்டங்கள் கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளன.ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, ஜெருசலேமிலிருந்து பெத்லகேம் நோக்கிய தனது பாரம்பரிய ஊர்வலத்தை முன்னெடுத்தார்.காஸாவில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு சமீபத்தில் சென்று வந்த அவர், அங்கிருக்கும் மக்களின் அன்பையும், மீண்டும் வாழ்வைக் கட்டியெழுப்பும் அவர்களின் மனவுறுதியையும் பெத்லகேம் மக்களுக்கு செய்தியாகக் கொண்டு வந்தார்.இந்தக் கொண்டாட்டங்கள் வெறும் மத நிகழ்வாக மட்டுமல்லாமல், பெத்லகேமின் பொருளாதார மீட்சிக்கான அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.பெத்லகேமின் 85 சதவீத குடும்பங்கள் சுற்றுலாவை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளன.கடந்த இரண்டு ஆண்டுகளாக போர் மற்றும் அரசியல் சூழலால் ஹோட்டல்கள், உணவகங்கள், நினைவுப் பரிசு கடைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கியிருந்தன.தற்போது மீண்டும் ஆரம்படாகியுள்ள கொண்டாட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மீட்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பெத்லகேம் மேயர் மஹேர் நிக்கோலா கனாவதி வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில், “இரண்டு ஆண்டுகால மௌனத்திற்குப் பின்னர், பெத்லகேம் மக்களுக்குத் தேவையான எதிர்கால நம்பிக்கையை நாங்கள் மீண்டும் விதைத்துள்ளோம். பாலஸ்தீனிய மக்கள் வாழ்க்கையை நேசிப்பவர்கள் மற்றும் அமைதிக்குத் தயாராக இருப்பவர்கள் என்பதை உலகுக்குச் சொல்ல விரும்புகிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தப் பண்டிகை கிறிஸ்தவர்களுக்கு மட்டுமானது அல்ல என்றும், முஸ்லிம்கள் மற்றும் சமாரியர்கள் என அனைத்து பாலஸ்தீனியர்களும் இணைந்து கொண்டாடும் ஒரு தேசிய விழாவாக இது உருவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இஸ்ரேலியப் பகுதிகளுக்குச் சென்று பணிபுரியும் தொழிலாளர்களுக்கான அனுமதிச் சீட்டுகள் இரத்து செய்யப்பட்டது மற்றும் நிதி நெருக்கடிகள் போன்ற பல சவால்கள் மேற்கு கரையில் நீடிக்கின்றன. இருப்பினும், “பெத்லகேம் தற்போது பாதுகாப்பாக உள்ளது, சுற்றுலாப் பயணிகளை வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம்” என மாநகராட்சி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.மாங்கர் சதுக்கத்திற்கு வந்தவுடன், ஜெருசலேமின் திருச்சபை பேராயர் கர்தினால் பியர்பாட்டிஸ்டா பிஸாபல்லா, காஸாவின் சிறிய கிறிஸ்தவ சமூகத்திலிருந்து வாழ்த்துக்களைக் கொண்டு வந்ததாக தெரிவித்து, இது மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வலுவான விருப்பத்தால் தூண்டப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஒளியால் குறிக்கப்பட்ட நத்தாருக்கான நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சுரேஷ் சலே திடீர் சுகயீனம் – தேசிய வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

சுரேஷ் சலே திடீர் சுகயீனம் – தேசிய வைத்தியசாலையில் அனுமதி

By news team
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு
உள்நாடு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு

By news team
பரீட்சை அச்சம் காரணமாக பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு
உள்நாடு

பரீட்சை அச்சம் காரணமாக பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு

By news team
ஊர்காவற்றுறை–யாழ்ப்பாணம் பேருந்து சாரதி மதுபோதையில் ஓட்டியதாக கைது
உள்நாடு

ஊர்காவற்றுறை–யாழ்ப்பாணம் பேருந்து சாரதி மதுபோதையில் ஓட்டியதாக கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?