முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம் விதித்து கெகிராவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சந்தேக நபருக்கும் தலா ரூபாய் 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 30 (2)இன் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டன. கல்கிரியாகம அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
