யாழ். பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களைப் பெற்று மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.நேற்று (19.02.2026) நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த செல்வி. அபிராமி நற்குணம் என்ற மாணவியே மருத்துவ கற்கையின் போது பல்வேறு துறைகளிலும் தனது சிறப்பான திறமையை வெளிப்படுத்தி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.இவர், மருத்துவப் படிப்பின் அனைத்துக் கட்டங்களிலும் முதலிடம், சத்திரசிகிச்சை, மகப்பேற்றியல் மற்றும் குழந்தை மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளில் விசேட சித்தி மற்றும் மருத்துவப் பீடத்தின் சிறந்த மாணவி விருது ஆகிய பதக்கங்களைப் பெற்றுக் கொண்டார்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீட வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக தங்கப் பதக்கங்களை வென்ற மாணவி என்ற பெருமையை மருத்துவ பட்டதாரி அபிராமி நற்குணம் பெற்றுள்ளார்.
