By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு

news team
Last updated: February 15, 2026 11:55 am
By news team
Share
1 Min Read
கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – மன்னாரைச் சேர்ந்த 20 வயது இளைஞன் உயிரிழப்பு
SHARE

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபர் மன்னாரைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த பண்டாரவெளி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய முஜாஹித் முஹம்மது சஹ்ரின் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞன், கொழும்பில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றி வருவதாகவும், தன்னுடைய நண்பர் சகிதம் தலைமுடி வெட்டுவதற்காக சென்ற போதே இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு முகம்கொடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.ஜிந்துப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சிகை அலங்கார நிலையத்திற்குள் நேற்று இரவு உள்நுழைந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் அங்கிருந்த பலர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.இதன்போது ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மன்னாரைச் சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.மேலும், படுகாயமடைந்த ஏனையவர்கள் கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.T-56 ரக துப்பாக்கி இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:deathgun shootmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
உள்நாடு

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

By news team
கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்
இந்தியா

கர்நாடக மாநிலத்தில் செல்போன், டி.வி.க்கு இரவில் 2 மணி நேரம் தடை விதித்த கிராமம்

By news team
வவுனியா மடுக்கந்தபகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது – போதைத்தடுப்பு பிரிவு நடவடிக்கை
உள்நாடு

வவுனியா மடுக்கந்தபகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது – போதைத்தடுப்பு பிரிவு நடவடிக்கை

By news team
நாடு விட்டு தாமாக வெளியேறும் குடியேறிகளுக்கு 3,000 டொலர் வழங்க அமெரிக்கா முடிவு
உலகம்

நாடு விட்டு தாமாக வெளியேறும் குடியேறிகளுக்கு 3,000 டொலர் வழங்க அமெரிக்கா முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?