கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்யுமாறு விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது வேதனையளிப்பதாக பாப்பரசர் 14ஆவது லியோ தெரிவித்துள்ளார்.உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒருதினம் மட்டும் போர்களை நிறுத்தி, உலக அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று பாப்பரசர் 14ஆவது லியோ கோரிக்கை விடுத்தார். ஆனால் பாப்பரசரின் இந்தக் கோரிக்கையை ரஷ்யா நிராகரித்து விட்டது.இது தொடர்பாக பாப்பரசர் 14ஆவது லியோ தெரிவித்ததாவது,கிறிஸ்துமஸ் தினத்தன்று போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ரஷ்யா நிராகரித்திருப்பது எனக்கு வேதனையளிக்கிறது.எங்கள் கடவுளின் பிறந்த நாளில் குறைந்தபட்சம் ஒருநாளாவது, சமாதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நல்லெண்ணம் கொண்ட அனைவருக்கும் மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.இந்தக் கோரிக்கையை அவர்கள் கேட்பார்கள் என்று நம்புகிறேன். உலகம் முழுவதிலும் 24 மணிநேர சமாதானம் நிலவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது, இவ்வாறு அவர் கூறினார்.
