கற்பித்தல் அனுபவம் கொண்ட பட்டதாரி நிபுணர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.இலங்கை ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின் கீழ் இதற்காக நடத்தப்படும் பரீட்சைக்கு தோன்றுமாறு அவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (03) காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இந்தப் பிரச்சினை தற்போதைய அரசாங்கத்திலோ அல்லது தங்களாலோ இல்லை என்றும், ஆனால் அவர்கள் பல தொழில்முறை மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்வதாகவும் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இந்த விவகாரம் குறித்து விரிவாக விவாதித்த ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட அனைவரின் தொழில்முறை பெருமை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்க அரசாங்கம் விரும்புகின்றது என குறிப்பிட்டது.
