ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தேவையான எரிபொருள் இறக்குமதிக்கான அனைத்து முன்பதிவுகளும் நேற்று (18)உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இது குறித்து கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமாரகே கருத்து வெளியிடுகையில்,நேற்று ஐந்து எரிபொருள் கப்பல்களுக்கான முன்பதிவுகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”இதற்கு முன்னர் மார்ச் இறுதி வரை மட்டுமே கையிருப்பு உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அடுத்த மாத இறுதி வரை தேவையான எரிபொருள் கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.கியூ.ஆர். முறைமையின் கீழ் பதிவு செய்யும் போது ஒரே ஒரு அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரே ஒரு தொலைபேசி இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
