By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு

news team
Last updated: December 31, 2025 8:30 pm
By news team
Share
1 Min Read
அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு
SHARE

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி மற்றும் புர்கினா ஃபஸோ உள்பட 20க்கும் அதிகமான நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்குத் தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டார்.இந்த நிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த உத்தரவுக்கு பதிலடி கொடுக்கும் முகமாக , மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தங்களது நாடுகளுக்குள் அமெரிக்கர்கள் நுழைய அனுமதி இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இவ்விடயம் குறித்து, மாலியின் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பரஸ்பர கொள்கைகளின் அடிப்படையில் மாலி குடிமக்களின் மீது விதிக்கப்பட்டுள்ள அதே தடைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் அமெரிக்கக் குடிமக்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், புர்கினா ஃபஸோவின் வெளிவிவகார அமைச்சர் கராமகோ ஜீன் – மேரி தரோரே கையெழுத்திட்ட அறிக்கையில், அமெரிக்கக் குடிமக்கள் மீது பயணத் தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TAGGED:americamuthalvantamilnewstrump
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை
உள்நாடு

ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை

By news team
தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்
உள்நாடு

தையிட்டியில் ‘ராஜமகா விகாரை’ எனக் காட்டப்படும் விகாரை போலியானது – வடக்கின் பிரதம சங்க நாயக்க தேரர்

By news team
6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு
உள்நாடு

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?