By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிரிழப்பு

news team
Last updated: May 11, 2026 7:12 pm
By news team
Share
1 Min Read
அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிரிழப்பு
SHARE

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்டடத்திலிருந்து வீழ்ந்து படுகாயமடைந்த கைதி, மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன. கைதி கட்டடத்திலிருந்து விழுந்ததற்கான சூழ்நிலைக் காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.2022 மே 9ஆம் திகதி காலிமுகத் திடலில் நடைபெற்ற அமைதிப் போராட்ட காலத்தில், பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்ட ஜயந்த குணவர்தன ஆகிய இருவரும் நிட்டம்புவ நகரில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.அமரகீர்த்தி அத்துகோரல கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக 12 நபர்கள் கண்டறியப்பட்டதையடுத்து, அவர்களுக்கு இந்த ஆண்டு கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் ஒருவரே வெலிக்கடை சிறைச்சாலை கட்டடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை
உள்நாடு

பருத்தித்துறை நகரசபை எல்லையில் இன்று முதல் உணவகங்களில் லஞ்ச் சீற் தடை

By news team
இலங்கையில் கடும் வெப்ப அலை: 21 மாவட்டங்களுக்கு வானிலை திணைக்களம் எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையில் கடும் வெப்ப அலை: 21 மாவட்டங்களுக்கு வானிலை திணைக்களம் எச்சரிக்கை

By news team
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு
உள்நாடு

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுவேன் – மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பு

By news team
காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்
உள்நாடு

காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?