பிரபல வயலின் வித்துவான் திபாவஹவரன் மறைவு

4 months ago


இலங்கையின் பிரபல வயலின் வித்துவான் "இசைக் கலாமணி" சண்முகநாதன் திபாவஹரன் (வயது 51) இன்று (ஜனவரி 15) புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

கொழும்பு கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக விரிவுரையாளரான சண்முகநாதன் திபாஹரன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக நுண்கலைப் பீட பட்டதாரியாவார்.

யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகக் கொண்ட இவர், இணுவில் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டவர். 

வயலின் இசைத்துறையில் தனக்கான திறமையினால் பல கலைஞர்களை உருவாக்கிய சண்முகநாதன் திபாவஹரன், கலை நிகழ்வுகள், பரதநாட்டிய அரங்கேற்றங்கள் என பல படைப்புகளை இசை இரசிகர்களுக்கு வழங்கியவர்.

அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை 16.01.2025 வியாழக்கிழமை உரும்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் இணுவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என உறவினர்கள் அறிவித்துள்ளனர்.