விமான ஓட்டுநர் உரிமம் எதுவுமின்றி, 17 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரதம விமானியாகப் பணியாற்றிய ஒருவரை கனடா நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2009ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இவர் கனடாவிற்குள் உள்நாட்டு வான்பயணங்கள் உட்பட 900க்கும் அதிகமான வான்பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் முறையான தகுதிகள் இல்லாமல் போயிங் 767, 777 மற்றும் 787 ரக விமானங்களை இயக்கி மில்லியன் கணக்கான டொலர்களை சம்பாதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.மேலும், குறிப்பிட்ட இந்த காலப்பகுதியில் வர்த்தக விமானங்களை இயக்குவதற்கான முறையான உரிமமோ அல்லது சரக்கு போக்குவரத்து விமானங்களை இயக்குவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரமோ இவரிடம் இருந்திருக்கவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.இத்தகவல் வெளிவந்ததை அடுத்து, உடனடியாகச் செயற்பட்ட அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அக்குறிப்பிட்ட நபரின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.அத்துடன், ஆயிரக்கணக்கான விமானப் பயணிகளின் உயிர்களை ஆபத்துக்குள்ளாக்கியமை தொடர்பாக அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் குறித்த நபர் இம்மாதம் 29ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
