டீசல் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பைத் தொடர்ந்து, பேருந்து கட்டணங்களை குறைந்தது 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், குறைந்தபட்ச பேருந்து கட்டணம் மற்றும் நீண்ட தூர சேவைகளுக்கான புதிய கட்டண விபரங்கள் இன்று (22) அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்ட போதிலும், அதிகரித்துள்ள இயக்கச் செலவுகளை ஈடுகட்ட கட்டணத் திருத்தம் இன்றி சேவையைத் தொடர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.டீசல் விலை உயர்வு காரணமாக ஏற்கனவே கணிசமான எண்ணிக்கையிலான தனியார் பேருந்துகள் சேவையில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
