எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபா முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளதுடன், அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.தென் அமெரிக்க நாடான கியூபா, தனது அண்டை நாடான வெனிசுவேலாவிலிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யைப் பெற்று வந்தது. அதற்கு ஈடாக பாதுகாப்பு, மருத்துவம் மற்றும் கல்விச் சேவைகளை கியூபா வழங்கி வந்தது.சமீபத்தில், வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியாவை அமெரிக்க இராணுவம் கைது செய்து நியூயோர்க் சிறையில் அடைத்ததைத் தொடர்ந்து, வெனிசுவேலாவின் எண்ணெய் சந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.வெனிசுவேலாவிலிருந்து கியூபாவுக்கு வழங்கப்பட்டு வந்த கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிறுத்தியுள்ளார்.மேலும், கியூபாவுக்கு எண்ணெய் வழங்கும் ஏனைய நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.ஏற்கனவே கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அந்நாட்டை கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.இதனால் விமானம் மற்றும் இதர போக்குவரத்து சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.நிலைமையைச் சமாளிக்க அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 4 நாட்களுக்கு மூட கியூபா அரசு உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் இந்தச் செயலால் கியூபாவின் எரிசக்தி நிலைமை மோசமடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள ரஷ்யா, கியூபாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.அதேபோல், மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம், அமெரிக்காவின் வரி எச்சரிக்கைகளுக்கு அஞ்சாமல் கியூபாவுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரும் இந்தச் சூழல் குறித்துத் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
