மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களுக்கு அடுத்த வருடத்துக்குள் தேர்தல் - ஜனாதிபதி
"அடுத்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும், வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி, பலமான அமைச்சரவை, நாடாளுமன்றம், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களை உள்ளடக்கிய பலமான அரசியல் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது அவசியம்"
இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
"வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க ஜனாதிபதி, பலமான அமைச்சரவை, நாடாளுமன்றம், மாகாண சபைகள், நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட அரசியல் பொறிமுறையானது நிர்வாகத்திற்கு தேவை.
அடுத்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம். நகர சபைகள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகளும் கூட தேர்தலை நடத்தவும் எதிர்பார்க்கிறோம்" என்றும் ஜனாதிபதி கூறினார்.