ரயில் பாதையில் பாதுகாப்பு சமிஞ்க்ஞைகள் கோளாறு- வடக்குக்கான ரயில் சேவை ஆரம்பிப்பதில் தாமதம்

7 months ago

தலாவ மற்றும் அநுராதபுரத்திற்கு இடையிலான சீரமைப்பு பணிகள் முழுமையடையவில்லை என தெரியவந்ததையடுத்து, வடக்குப் பாதையில் ரயில் சேவையை மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர் தண்டவாளத்தின் மறுவடிவமைப்புக்குப் பிறகு இன்று திங்கள்கிழமை (ஒக் 21) ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்படவிருந்தன.


பல சோதனை ஓட்டங்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களின் முறைப்பாடுகளுக்கு பின்னர், பாதை திறக்க தயாராக இல்லை என்பது தெரியவந்தது.


ரயில் கடவைகளின் சமிக்ஞை அமைப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் திருப்தியடையவில்லை என இயந்திர சாரதிகள் சங்கத்தின் தலைவர் சந்தன வியந்துவ தெரிவித்துள்ளார்.


இந்த திட்டம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.


இத்திட்டம் கிட்டத்தட்ட 300 மில்லியன் ரூபா செலவில் நிறைவடைந்து செப்டெம்பர் 12ஆம் திகதி முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.