இருவேறு பகுதிகளில் பரப்புரையில் ஈடுபட்ட கஜேந்திரகுமார் மற்றும் பார்த்திபன் பொலிஸாரினால் கைது

7 months ago

தேர்தல் விதிமுறைகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் இருவேறு கட்சிகளின் வேட்பாளர்கள் பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டனர். 


தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராசா பார்த்திபன் ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நெல்லியடி நகரில் பரப்புரையில் ஈடுபட்ட போது நெல்லியடி பொலிஸாரினாலும் மற்றும் வரதராசா பார்த்திபன் பருத்தித்துறை நகரில் பரப்புரையில் ஈடுபட்ட போது பருத்தித்துறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதியப்படுவதாக பொலிஸார் கூறினர்.


வேட்பாளர்களது கருத்தறிய முடியவில்லை.